Wednesday, June 10, 2009

காதல் முத்து (3)

எடுத்துவந்த சாப்பாட்டை கையில்வைத்திருந்தபடி,
உட்கார்ந்து மனத்தினால் உணர்வினால் கலந்து
தன் கண்ணனுக்கு ஊட்டுவதாக நினைத்துக்
கொண்டாள்!
ம்..சாப்பிடுங்கள்! என்று மனதால் அவனுக்கு ஊட்டிக்
கொண்டாள்!
அவள் மனத்திற்குள் அவனோடு சேர்ந்து இருந்து
சந்தோஷிப்பதாகவே, அவள் மனம், உடல் உணர்வுகள்
பேசிக்கொண்டது!
நிறையவே ஊட்டினாள்!
அவனும் அவளுக்கு ஊட்டுவதாகவே அவள் உள்
உணர்வு கூறியது!
அன்றொருநாள் யாருமற்ற தனிமையில் அவள் இருந்த
போது அவன் அவளுடன் செய்த குறும்புகள்
ஒவ்வொன்றாய் அவள் ஞாபகத்திற்கு வந்தது!

மடிமீது சாய்ந்திருந்து அவன் பேசிய அன்பான
தென்றலின் ஸ்பரிஸங்கள், வருடல்கள், அதை
இப்போது சந்திப்பதாக உணர்ந்தாள்!
(பாடல் பூக்கொடியின் புன்னகை..பாடியவர் சந்தியா..
படம் இருவர்)

'பிரிவு' என்ற உணர்வே இல்லாது ஒன்றுடன் ஒன்று
உயிர்கலந்து பின்னிப்பிணைந்து, முத்தங்கள்
கலந்து நிறைந்திருக்கும் நிலையில், தன்னை
மறந்திருந்தாள் அவள்!
இல்லையில்லை! அவர்கள் இருவரும் தம்மை
மறந்து மயங்கிய நிலையில் இருந்தார்கள்!
என்பதுதான் உண்மை!


மனதோடு உணர்வோடு பின்னிப் பிணைந்த காதல்
கணப்பொழுதும் பிரியாத உணர்வுகளின் புரியாத
புதிராக மற்றவர்க்கு இருந்தாலும்,

புனிதமான தூய்மையான உணர்வுக்குள் இணைந்து
பிணைந்த காதலர்க்கு, அது புதிரல்ல! புதுமையல்ல!
ஆழ்கடலில் மூழ்கி கண்டெடுத்த முத்து! அது
உண்மைக்காதலர்தம் காதல்முத்து!


நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்
11-8-2005

No comments:

Post a Comment